சென்னை: நடிகர் கிஷோரிடம் சமீபத்தில் ‘‘உங்களுக்கு டைம் மெஷின் கிடைத்தால் என்ன செய்வீர்கள்’’ என கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘‘2014ம் ஆண்டுக்கு சென்று பிரதமரை மாற்றிவிடுவேன். இந்தியாவே மாறியிருக்கும். நாடு இப்போது ஆபத்தான நிலைமையில் இருக்கிறது. வெறுப்புணர்வை முதலீடாக வைத்து ஆட்சிக்கு வருபவர்கள் ரொம்ப ஆபத்தானவர்கள். அன்பு இல்லை என்றால் இங்கே எதுவுமே இருக்காது’’ என்று கூறியுள்ளார்.
