×

7 மாவட்டங்களில் கடும் பனிமூட்டம்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தெற்கு கேரளா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதனால் தென் தமிழகம் மற்றம் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மேலும், 7 மாவட்டங்களில் கடும் பனி மூட்டம் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு கேரளா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று லேசானது முதல் மிதமான மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக இன்றும் அதே மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும், நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் கடும் பனி மூட்டம் காணப்படும். இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags : Chennai ,South Kerala ,South Tamil Nadu ,Delta districts ,
× RELATED எடப்பாடி பழனிசாமி என்ன பொருளாதார...