டெல்லி: எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் முழக்கம் காரணமாக மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட், ராகுல் காந்தியை பேச அனுமதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர். ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்ற இருந்ததாக கூறப்பட்டது. மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்ற இருந்ததாக கூறப்பட்ட நிலையில் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
