நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி முகாம்

நாகை, பிப்.2: நாகை மாவட்ட கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மையத்தில் வரும் 4ம் தேதி இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெறுகிறது என்று உதவி பேராசிரியர் சுரேஷ் தெரிவித்துள்ளார். நாகை மாவட்ட கால்நடை மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி வரும் வருகிற 4ம் தேதி நடைபெறுகிறது. இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் 04365- 247123 என்ற தொலை பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: