தண்டையார்பேட்டை: அசாம் மாநிலத்தை சேர்ந்த நிமிக் (36), நேற்று முன்தினம் அசாமில் இருந்து விமானத்தில் சென்னை வந்துள்ளார். விமான பயணத்தில் சலீம் என்ற நபர் நிமிக்கிற்கு அறிமுகமானார். இவர், டிப்டாப் உடையில், இனிமையாக பேசியதால் சிறிது நேரத்திலேயே இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. சென்னை வந்ததும், நிமிக்கிடம் ஆசை வார்த்தை கூறி தன்னுடன் அழைத்து சென்ற சலீம், பூங்கா நகரில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினார்.
பின்னர் சலீம், நான் உனக்கு ஒரு கொலுசு எடுத்து தருகிறேன் வா, எனக்கூறி நேற்று நிமிக்கை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள ஒரு பிரபல நகை கடைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, கொலுசை எடுத்து காலில் போட்டு நிமிக் அழகு பார்த்துக் கொண்டிருந்தார்.