கருங்கல், ஜன.30 : கருங்கலில் சாலைகளை சீரமைக்க கோரி காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் 2 எல்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர். குமரி மாவட்டம் கருங்கல், பாலப்பள்ளம், கீழ்குளம், கிள்ளியூர், புதுக்கடை, மத்திகோடு, பாலூர், திப்பிறமலை, முள்ளங்கினாவிளை, மிடாலம், இனையம் புத்தன்துறை, பைங்குளம், முஞ்சிறை ஆகிய 13 ஊராட்சி, பேரூராட்சிகளில் உள்ள பல்வேறு சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையில் பொதுமக்கள் வாகனங்களில் செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். தினமும் விபத்துகள் ஏற்படுகிறது. இந்த சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை சாலை பணிகள் தொடங்கப்படவில்லை. நிதி ஒதுக்கீடு செய்து, நிர்வாக அனுமதி வழங்கிய பிறகும் சாலை பணிகளை தொடங்காத அதிகாரிகளை கண்டித்தும், பழுதடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க கேட்டும் நேற்று காங்கிரஸ் சார்பில் கருங்கல் பேருந்து நிலையம் முன் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.