×

ஸ்கூட்டர் பெட்டியில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் திருட்டு

கோபி, ஜன. 29: கோபி அருகே உள்ள திங்களூர் நிச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம் (42). இவர், நேற்று தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பெட்டியில் ரூ.40 ஆயிரத்தை வைத்துக் கொண்டு அவருடன் வேலை செய்து வரும் விஜய் என்பவருடன் திங்களூர் சென்றுள்ளார்.

அங்கு ஒரு பேக்கரி முன்பு ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு டீ குடித்துக் கொண்டிருந்தபோது பைக்கில் வந்த 2 பேர் ஸ்கூட்டர் பெட்டியை உடைத்து அதிலிருந்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து வெங்கடாசலம் அளித்த புகாரின் அடிப்படையில், திங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையரை தேடி வருகின்றனர்.

 

Tags : Gopi ,Venkatachalam ,Thingalur Nichampalayam ,Thingalur ,Vijay ,
× RELATED பவானியில் கிராம நிர்வாக அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்