திருச்செந்தூர், ஜன. 30: குரும்பூர் அருகேயுள்ள பணிக்கநாடார்குடியிருப்பு கணேசர் பள்ளிகளில் ஆங்கில வழி தொடக்கக்கல்வி மாணவ, மாணவிகளுக்கான புதிய அறிவியல் ஆய்வகம் திறப்பு விழா நடந்தது. பள்ளி செயலாளர் சுப்பு தலைமை வகித்தார். தலைமையாசிரியர் வித்யாதரன் வரவேற்றார். திருச்செந்தூர் கல்வி மாவட்ட கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வி அறிவியல் ஆய்வகத்தை திறந்து வைத்தார். விழாவில் பள்ளி சார்பில் ஏழை மாணவர்கள் 5 பேருக்கு கல்வி செலவாக தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.