துரைப்பாக்கம்: சிங்கள அரசால் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டதை தட்டிக்கேட்காத மத்திய, மாநில அரசை கண்டித்து திமுக உண்ணாவிரத போராட்டம், மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ தலைமையில் நடந்தது. தமிழக மீனவர்களை கொடூரமாக படுகொலை செய்த சிங்கள அரசை கண்டித்தும், அதனை தட்டிக்கேட்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம், மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ தலைமையில் திருவான்மியூர் தெற்கு மாட வீதியில் நேற்று நடந்தது. வேளச்சேரி எம்எல்ஏ வாகை சந்திரசேகர், சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ், மாநில மீனவர் அணி அமைப்பாளர் பரிமேலழன், பாலவாக்கம் சோமு மற்றும் திமுக நிர்வாகிகள், சென்னை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 13 மீனவ கிராமத்தை சார்ந்த மீனவ மக்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.
சிங்கள அரசால் தமிழக மீனவர்கள் படுகொலை மத்திய, மாநில அரசை கண்டித்து திமுக உண்ணாவிரத போராட்டம்: எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்பு
- உண்ணாவிரத போராட்டம்
- திமுக
- மீனவர்கள் படுகொலை
- சிங்களம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- மத்திய
- பாராளுமன்ற உறுப்பினர்கள்
- மாநில அரசு