சுரண்டை, ஜன. 29: குலையநேரி குடிநீர் வசதியற்ற ஆரம்ப சுகாதார நிலையத்தால் இங்கு சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகள் உள்ளிட்ட அனைத்து நோயாளிகளும் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர்.வி.கே.புதூர் தாலுகா, சுரண்டை அருகே குலையநேரி ஊராட்சிப்பகுதியில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரட்டை குளம், சுப்பையாபுரம், கடையாலுருட்டி, குலையநேரி, ஆனைகுளம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் தினமும் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு உள் நோயாளிகள் மற்றும் புற நோயாளி பிரிவுகள் செயல்படுகின்றன. குடும்பக் கட்டுப்பாட்டு சேவையுடன் சிறிய நோய்கள் மற்றும் ஆரம்ப நிலையில் உள்ள நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் சிறுநீர் பரிசோதனை,ரத்த வகை பரிசோதனை இசிஜி,ஸ்கேன் மற்றும் ரத்தக் கொதிப்பு நோய்,சர்க்கரை நோய் போன்ற நோய்களுக்கும் சிகிச்சை வழங்கப்படுகிறது.குறிப்பாக இந்த மருத்துவமனையில் பெண்களுக்கு பேறு காலத்திற்கு முன் மற்றும் பின் வழங்கப்படும் சிகிச்சை சிறப்பாக வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் குடிநீர் வசதி முறையாக செய்துதரப்படவில்ை. இங்கு நிலத்தடி நீரும் சமீபகாலமாக சரிவர இல்லை.