காளையார்கோவில், ஜன.28: காளையார்கோவிலில் உள்ள சொர்ணகாளீஸ்வரர் கோவிலில் கடந்த 19ம் தேதி தைப்பூசம் உற்சவத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 8 நாட்கள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடைபெற்றது. நேற்று காலை 9.30 மணியளவில் தேரோடும் வீதி வழியாக இரண்டு தேர்கள் இழுக்கப்பட்டன. பெரிய தேரில் சொர்ண காளீஸ்வரர் காட்சியளிக்க ஆண்களும், சின்னத் தேரில் சொர்ணவள்ளி அம்மன் காட்சியளிக்க பெண்களும் இழுத்து வந்தார்கள்.