கமுதி, ஜன.27: கமுதி மற்றும் திருவாடானை வட்டாரத்தில் உள்ள பள்ளிகள் அரசு அலுவலகங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் நேற்று 72வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. சத்திரிய நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் அம்பலகாரர் சக்திவேல், பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செயலாளர் ராஜேஷ் கண்ணா, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தலைவர் மாணிக்க சஞ்சீவி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றினர். கௌரவ உயர்நிலைப்பள்ளி, கலாவிருத்தி மேல்நிலைப்பள்ளி மற்றும் பல்வேறு கிராமங்களில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளிகளில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.