திருத்துறைப்பூண்டி பூசலாங்குடி சிவன் கோயில் குளத்தில் ஆகாயதாமரை அகற்றம்

திருத்துறைப்பூண்டி, ஜன.26: திருத்துறைப்பூண்டி அருகே பூசலாங்குடி ஊராட்சி ஆலிவலம் ஜீவா காலனி தெரு அருகில் உள்ள சிவன் கோயில் குளத்தில் உள்ள ஆகாயதாமரைகளை மாணவர் பெருமன்றம் சார்பில் மாவட்ட தலைவர் வீரபாண்டியன் தலைமையில் இளைஞர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பூசலாங்குடி ஊராட்சி தலைவர் சுபிதா இப்பணியை தொடங்கி வைத்தார். ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர் அகற்றும் பணியை பார்வையிட்டார்.

Related Stories: