திங்கள்சந்தை, ஜன. 26: இரணியல் அருகே 2 குழந்தைகளுடன் பைக்கில் வந்த ஆசிரியையிடம் பைக்கில் வந்த மர்மநபர்கள் செயின் பறித்தனர். இதில் ஆசிரியை மற்றும் 2 குழந்தைகள் கீழே விழுந்து காயமடைந்தனர். தக்கலை அருகே கல்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்பின்மேரி(33). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கண்டன்விளையில் உள்ள உறவினர் வீட்டு திருமண விழாவுக்காக 2 குழந்தைகளுடன் பைக்கில் சென்றார். பின்னர் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பி கொண்டிருந்தார். இரணியல் - தக்கலை சாலையில் ஆழ்வார்கோயில் பகுதியில் வந்தபோது, பின்னால் ஒரு பைக்கில் ஹெல்மெட் அணிந்து 2 வாலிபர்கள் வந்தனர். திடீரென அந்த வாலிபர்கள் ஜோஸ்பின் மேரியின் கழுத்தில் கிடந்த ஐந்தரை பவுன் செயினை பறிக்க முயன்றனர். அதிர்ச்சையடைந்த ஜோஸ்பின் மேரி சுதாரித்துக்கொண்டு செயினை இறுக்கமாக பிடித்துக்கொண்டார். இந்நிலையில் பைக்கில் இருந்து 2 குழந்தைகளுடன் ஜோஸ்பின் மேரி கீழே விழுந்தார்.