சென்னை: தனக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை கோரிய மாதம்பட்டி ரங்கராஜ் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் உத்தரவிட்டும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என கிரிசில்டா குற்றம்சாட்டியுள்ளார். டி.என்.ஏ. சோதனையில் கிரிசில்டாவின் குழந்தையின் தந்தை நான் என தெரியவந்தால் பொறுப்பேற்க தயார் என மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
