டெல்லி : மறு அறிவிப்பு வரும்வரை இந்தியர்கள் ஈரானுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு வெளியுறவு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. விலைவாசி உயர்வு உள்ளிட்ட பொருளாதார நெருக்கடிகளால் ஈரானில் நடைபெறும் போராட்டத்தால் பதற்றம் நிலவுவதால், அங்கிருக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
