கடலூர், டிச. 25: கடலூர் அருகே சேடப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன்(40). இவர் சம்பவத்தன்று பைக்கில் சேடப்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் இவரது பைக் மீது மோதியதில் கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில், முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
