×

காந்தி பெயரை அழித்து விட்டு புதிய சட்டம் செயல்படுத்துவோம் என்பது காந்தியை கொலை செய்ததைவிட கொடிய செயல்: ப.சிதம்பரம்

சென்னை: காந்தி பெயரை அழித்து விட்டு புதிய சட்டம் செயல்படுத்துவோம் என்பது காந்தியை கொலை செய்ததைவிட கொடிய செயல் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘காந்தி மீது அவர்களுக்கு எவ்வளவு வெறுப்பு, காழ்ப்புணர்வு என்பதை இந்த ஒரு செயலே அம்பலப்படுத்துகிறது. காந்தி பெயர், நினைவை அழித்து விட்டு யாரை தேசப் பிதாவாக முன்னிறுத்துவர் என்பதை உங்கள் கற்பனைக்கு விடுகிறேன். இந்திய வரலாறு 2014ல் தொடங்கியது என பறைசாற்றியவர்கள் இன்னும் எத்தனை கொடுமை செய்வார்கள் என பார்க்கலாம். தென்னாட்டை பின்பற்றி வடநாடு ஒரு நாள் திரும்பும் என்ற நம்பிக்கையில் நாட்டின் எளிய மக்கள் வாழ்கிறார்கள்’ எனவும் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Tags : Gandhi ,P. Chidambaram ,Chennai ,Senior ,Congress ,
× RELATED பூவிருந்தவல்லி – போரூர் இடையிலான...