கோவா: அர்போரா கடற்கரையில் உள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் சிலிண்டர் வெடித்து விபத்து. விடுதி ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் உள்பட 23 பேர் உயிரிழந்தனர். வார இறுதி நாள் என்பதால் ஏராளமானோர் திரண்டிருந்த நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்திவருகின்றனர்.
