டெல்லி: மருத்துவப் படிப்பிற்கான இடத்தை இழந்த மாணவர்களுக்கு மீண்டும் எம்.பி.பி.எஸ். இடம் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கல்வி கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தினம் வங்கி விடுமுறை என்பதால் கட்டணத்தை செலுத்த முடியவில்லை என மனு அளிக்கப்பட்டது. கல்லூரி கட்டணம் செலுத்த முடியவில்லை எனக் கூறி பாதிக்கப்பட்ட மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மாணவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்க உத்தரவிட்டிருந்தது.
