சென்னை: டிட்வா புயலால் கடுமையாக பாதித்த இலங்கைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரணம் அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு சார்பில் நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு நாளை கப்பல் மூலம் அனுப்பப்படவுள்ளது. நிவாரண பொருட்கள் கொண்டு செல்லும் கப்பலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைக்கிறார். அரிசி, பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தமிழ்நாடு அரசு சார்பில் இலங்கை அனுப்பி வைக்கப்படவுள்ளது.
