திருமங்கலம், ஜன.11: திருமங்கலம் அருகே குன்னத்தூரில் கட்டப்பட்டு வரும் ஜெயலலிதா கோயிலை வரும் 30ம் தேதி முதல்வர் திறந்து வைக்கிறார் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். ஜெயலலிதா பேரவை சார்பில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குன்னத்தூரில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதே இடத்தில் நினைவு மண்டபம் மற்றும் ஆசிரியர் பயிற்சி கூடமும் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிட பணிகளை அமைச்சர் உதயகுமார் ஆய்வு செய்தார். பின்னர் அவர், கூறியதாவது, வரும் 30ம் தேதி குன்னத்துரில் கட்டப்பட்டுள்ள ஜெயலலிதா கோயிலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைக்கின்றனர். பின்னர் நலத்திட்டங்களை வழங்க உள்ளனர்.