சிவகங்கை, ஜன.6: சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் நாற்றங்கால் பண்ணை அமைத்து மர நாற்றுகள் வளர்க்கப்பட உள்ளது.
கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள அறிக்கையில்: மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 445 கிராம ஊராட்சிகளில் 2ஆயிரத்து 723 குக்கிராமங்கள் உள்ளன. தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் தலா ஒரு நாற்றங்கால் பண்ணை மற்றும் பாகனேரி ஊராட்சியில் உள்ள ஒரு நாற்றங்கால் பண்ணை என மொத்தமுள்ள 13 நாற்றங்கால் பண்ணைகளில் ஏற்கனவே உற்பத்தி செய்யப்படும் இலுப்பை, வேம்பு, பூவரசு, மயில் கொன்றை, புங்கை, புளி, கொன்றை மற்றும் நொச்சி உள்ளிட்ட மரக்கன்றுகள் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் நட்டு வளர்க்கப்பட்டு வருகிறது.