சென்னை: மது அருந்துபவர்கள் பார்களில் குடித்துவிட்டு உடனே செல்ல வேண்டும். தேவையில்லாமல் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று பார் உரிமையாளர்களுக்கு மாவட்ட மேலாளர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். தமிழகத்தில் உள்ள 3000 டாஸ்மாக் டாஸ்மாக் பார்களில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அந்தந்த மாவட்ட மேலாளர்கள் பார் உரிமையாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:மாஸ்க் அணிந்து வருபவர்களை மட்டுமே பார்களுக்குள் அனுமதிக்க வேண்டும். பார்களுக்குள் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக எச்சில் துப்பக்கூடாது. மதுக்கூடத்திற்கு வரும் அனைவரும் ‘ஆரோக்கிய சேது’ செயலியை செல்போனில் பதிவு செய்திருக்க வேண்டும்.