வி.கே.புரம், ஜன. 5: மூட்டுவலிக்கு சிகிச்சை பெற்று வரும் முருகையா பாண்டியன் எம்எல்ஏவை அவரது இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.
அம்பை ெதாகுதி சட்டமன்ற உறுப்பினர் முருகையாபாண்டியன், மூட்டுவலி காரணமாக கடந்த ஒரு மாதமாக வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று சேரன்மகாதேவியில் நடந்த பிஎச்.பாண்டியன் மணிமண்டபம் திறப்பு விழாவிற்கு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெற்கு பாப்பான்குளத்தில் உள்ள முருகையாபாண்டியன் எம்எல்ஏ வீட்டிற்கு வந்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தனர். மேலும் மூட்டு அறுவை சிகிச்சை செய்து கொள்ளுமாறு எம்எல்ஏவிடம் இருவரும் அறிவுறுத்தினர்.