திருவில்லிபுத்தூர் ஜன.4: திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் திருப்பாவை முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவில்லிபுத்தூரில் திருப்பாவை முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் சன்னதியின் ஜீயர் சடகோப ராமானுஜ ஜீயர், மன்னார்குடி செண்டலங்கார செண்பக ராமானுஜ ஜீயர், கோயமுத்தூர் நாராயண ராமானுஜ ஜீயர் மற்றும் அகில இந்திய குழந்தைகள் நல உரிமை பாதுகாப்பு கமிஷனை சேர்ந்த டாக்டர் ஆனந்த், கலசலிங்கம் பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் வாசுதேவன், ஆண்டாள் கோயில் வேத பிரான் பட்டர் சுதர்சன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.