திருவரங்குளம் பிடாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

புதுக்கோட்டை, டிச.30: புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் பிரசித்தி பெற்ற பிடாரியம்மன் கோயில் உள்ளது. திருமண வரம், குழந்தை வரம், கல்வி வரம், செல்வ வரம், ஆரோக்கிய வரம், வேண்டி பக்தர்கள் விரதம் இருந்து செவ்வாய்கிழமைகளில் ராகுகால நேரத்தில் பூஜை செய்வது வழக்கம். இந்த வாரம் ராகுகால பூஜை 15ம் ஆண்டு விழாவை முன்னிட்டு அம்பாளுக்கு பால், பழங்கள், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று சந்தனக்காப்பு அலங்காரம் செய்து மகாதீபம் காட்டப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: