ராஜபாளையம் அருகே கொடி அணிவகுப்பு

ராஜபாளையம், டிச. 30: ராஜபாளையம் அருகே முறம்பு, ஆசிலாபுரம் பகுதிகளில் மாவட்ட எஸ்பி பெருமாள் உத்தரவின்பேரில் காவலர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினர். ஏடிஎஸ்பி மாரிராஜ், குற்றாலிங்கம் தலைமையில் டிஎஸ்பி நாகசங்கர் மேற்பார்வையில் தேர்தல் விழிப்புணர்வு மற்றும் முறம்பு பகுதியில் அடிக்கடி இருசமூகத்தினர் இடையே நடக்கும் மோதலை கட்டுக்குள் கொண்டு வரும் விதமாக இந்த கொடி அணிவகுப்பு நடந்தது. இதில் கலவரம் நேரத்தில் பயன்படுத்தும் வஜ்ரா வாகனம், பாதுகாப்பு கவசத்துடன் 300க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

Related Stories: