சிக்கபூவத்தி கிராமத்தில் மக்கள் கிராம சபை கூட்டம்

கிருஷ்ணகிரி, டிச.30: கிருஷ்ணகிரி ஒன்றியம் சிக்கபூவத்தி கிராமத்தில் திமுக சார்பில் நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கோவிந்தசாமி தலைமை வகித்தார். மாவட்ட இலக்கிய அணி தலைவர் தனசேகரன், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் வாசுதேவன், ஒன்றிய பொருளாளர் தமிழரசன், ஊராட்சி செயலாளர் யுவராஜ், டேம்.பிரகாஷ், ஆலப்பட்டி சக்திவேல், கங்கலேரி சந்திரசேகர், மாதேஸ்வரன், கண்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ பங்கேற்று பேசினார். கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் நிர்வாகிகள், கிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், ராஜா, சவுகத்அலி, ராஜாமணி, மாணிக்கம், தங்கம், செல்வம், ராஜசேகர், காவேரி, சின்னராஜ், பழனிவேல், ரவி, மகேந்திரன், ராமச்சந்திரன், நந்தகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். காவேரிப்பட்டணத்தில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு நகர செயலாளர் பாபு தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் தேங்காய் சுப்பிரமணி,  மாவட்ட துணை செயலாளர் சாவித்திரி மூர்த்தி, வழக்கறிஞர் பிரிவு மாவட்ட அமைப்பாளர் விஸ்வபாரதி, சிறுபான்மை பிரிவு துணைத் தலைவர் சஜித், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: