புதுடெல்லி: கொரோனா கட்டுப்பாடு, தென் மேற்கு பருவமழை போன்றவற்றால் இந்த ஆண்டு வெங்காய உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக நாடு முழுவதும் வெங்காயத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரித்தது. விலையை கட்டுப்படுத்த வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. மேலும், பெங்களூர் ரோஸ், கிருஷ்ணாபுரம் வெங்காய ஏற்றுமதிக்கு கட்டுபாடு விதித்தது.