திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு நாளை சிவகங்கை வருகை

சிவகங்கை, டிச.29: திமுக மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் எம்.எல்ஏ விடுத்துள்ள அறிக்கையில்: திமுக தலைவரால் நியமிக்கப்பட்டுள்ள திமுக பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி தலைமையிலான தேர்தல் அறிக்கை குழுவினர் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். நாளை காலை 9மணி அளவில் சிவகங்கையில், திருப்பத்தூர் சாலையில் உள்ள கலைஞர் மாளிகைக்கு தேர்தல் அறிக்கை குழுவினர் வருகை தர உள்ளனர்.

இக்குழுவினரிடம் மாவட்ட அளவில் உள்ள மிக முக்கியமான பிரச்னைகள், தேவைகள், அடிப்படை வசதிகள் குறித்து மனுவாக நேரில் தரலாம். எனவே மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வர்த்தக பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக தேர்தல் அறிக்கை குழுவினரிடம் தரலாம். இந்த கோரிக்கை மனுக்கன் பரிசீலிக்கப்பட்டு திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறும். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றவுடன் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: