தூத்துக்குடி, டிச. 29: தூத்துக்குடி மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வடிகால் வசதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தூத்துக்குடி தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகரக்குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அர்ஜுனன், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முத்து, ஒன்றிய செயலாளர் சங்கரன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். துறைமுக செயலாளர் காசி, இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஜாய்சன், மாதர் சங்கம் கமலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.