அண்ணாநகர்: கூவம் ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பொக்லைன் மற்றும் 20 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்த சம்பவம் அண்ணாநகரில் பரபரப்பை ஏற்படுத்தியது. அண்ணாநகர் சாந்தி காலனி பகுதியை ஒட்டியுள்ள கூவம் ஆற்றில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில், சிலர் பொக்லைன் இயந்திரம் மற்றும் லாரிகள் மூலம் மணல் திருட்டில் ஈடுபட்டனர். தகவலறிந்த அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், திமுக பகுதி செயலாளர் பரமசிவம் தலைமையில் சம்பவ இடத்தில் திரண்டனர். அங்கு, 2 பொக்லைன்கள் மூலம் 20 லாரிகளில் மணல் திருட்டில் சிலர் ஈடுபட்டனர். அவர்களை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.