புதுக்கோட்டை, டிச.26: புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட சின்னப்பா நகரை சேர்ந்தவர் சண்முகம். இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரமா (40). இவர் மனநிலை சரியில்லாதவர். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் ரமா நேற்றுமுன்தினம் இரவு முதல் காணவில்லை என அவரது கணவர் சண்முகம் தேடி வந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் நேற்று காலை பேராங்குளத்தில் ஒரு பெண்ணின் சடலம் மிதப்பதாக அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.