விருதுநகர்,டிச.26: விருதுநகர் எம்ஜிஆர் சிலையருகே உள்ள எஸ்பிஐ வங்கி கிளையின் முன்பகுதியில் அதே வங்கிக்கு 3 ஏடிஎம் மிஷின்கள் ஒரு அறையில் செயல்பாட்டில் உள்ளன. இவற்றில் நேற்று காலை பணம் எடுக்க சென்றவர்களின் பணம் வெளியே வராமல் மிஷினிலேயே சிக்கி கொண்டது. ஆனால் வாடிக்கையாளர்களின் கணக்கில் பணம் கழித்து குறுந்தகவல் வந்ததுள்ளது. நெடுஞ்சாலைத்துறை இளநிலை பொறியாளார் மாரிமுத்து தனது கணக்கில் ரூ.20 ஆயிரத்தை எடுக்க முயன்ற போது மிஷினில் இருந்து ரூ.8,500 மட்டும் வெளியே எடுக்க முடிந்துள்ளது. மீதிபணம் ரூ.11,500 வெளியே வராமல் சிக்கி நின்றுள்ளது. பணம் வெளியே வராமல் சிக்கியதை தொடர்ந்து பஜார் போலீசாருக்கும் தகவல் தெரித்தார். போலீசார் வந்து வங்கி மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர். வங்கி மேலாளரும் திங்கட்கிழமை வங்கி வந்து கடிதம் எழுதிதரும்படி தெரிவித்தார்.