ஆவடி: அம்பத்தூரில் டிபன் செய்யாததால் கணவனுடன் ஏற்பட்ட தகராறில், வீட்டில் காதல் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் கணவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.அம்பத்தூர் எஸ்.வி நகர் சிவசண்முகம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் இளையகுமார்(28). இவர், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுகந்தி(24). இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இந்த தம்பதியினர் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சுஜித்குமார் என்ற 2 வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலை இளையகுமார் வீட்டில் இருந்து புறப்பட்டு கம்பெனிக்கு சென்று விட்டார். பின்னர், மதியம் சுகந்தி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டர். இதனை பார்த்த, வீட்டு உரிமையாளர் குப்புராஜ் என்பவர் இளையகுமாருக்கு போன் செய்து தகவல் கூறி உள்ளார்.