சென்னை: நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் சாஸ்திரிபவன் அருகே உள்ள 4 மாடி கட்டிடத்தில் தனியார் வங்கியின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நேற்று கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் ஊழியர்கள் யாரும் பணிக்கு வரவில்லை. இந்த கட்டிடத்தின் தரை தளத்தில் வங்கியின் உபயோகப்படாத பொருட்கள் அதிகளவில் ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது. நேற்று மதியம் இந்த அறையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை பார்த்த காவலாளி உடனே தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். சிறிது நேரத்தில் தரைத்தளம் முழுவதும் தீ பரவி அப்பகுதியை புகை மூட்டமாக காட்சியளித்தது.