தாப்பாத்தி கிராமத்தில் மேல்மருவத்தூர் வழிபாட்டு மன்றம் திறப்பு விழா

தூத்துக்குடி, டிச.21: எட்டயபுரம் அருகேயுள்ள தாப்பாத்தி கிராமம் முகாமில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் திறப்புவிழா, ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 80வது அவதார பெருமங்கல விழா நடந்தது. விநாயகர் பூஜை, குருபூஜையுடன் தொடங்கி சக்தி கொடியை ஊர் தலைவர் ஆனந்த் ஏற்றி வைத்தார். சிறப்பு வழிபாட்டினை மாவட்ட வேள்விக்குழு தலைவர் கிருஷ்ணலீலா தொடங்கி வைத்தார். தொடர்ந்து பக்தர்கள் 108, 1008 தமிழ் மந்திரங்களை கூறி அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

ஏழை, எளிய மக்களுக்கு ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் சக்திமுருகன் ஆடைதானம் வழங்கி தொடங்கி வைத்தார். விழாவில், ஆன்மிக இயக்க மாவட்ட செயலாளர் மாரிமுத்துக்குமார், பொருளாளர் கண்ணன், மகளிரணி தலைவி திலகவதி, தணிக்கை குழு வேலு, கோவில்பட்டி மன்ற தலைவர் அப்பாசாமி, கழுகுமலை தலைவி விஜயலெட்சுமி, வட்டத்தலைவர் புதூர் ராமகிருஷ்ணன், வேள்விக்குழு வட்ட பொறுப்பாளர் சக்கனாபுரம் மஞ்சுளா, தாப்பாத்தி மன்ற நிர்வாகிகள் சரஸ்வதி, சாந்தினி, சுகந்தினி, தேமதி, யோகாம்பாள், எட்டயபுரம் திருஞானம், இசக்கி பங்கேற்றனர்.

Related Stories: