நீடாமங்கலம், டிச.17: கொரடாச்சேரி அருகே மாடி வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானது. திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அடுத்த அத்திக்கடை கீழத்தெருவை சேர்ந்த தாஜ்தீன் மகன் இதயதுல்லா(45). இவர் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாட்டில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவருக்கு அத்திக்கடையில் மிகப்பெரிய மாடி வீடு உள்ளது. வெளிநாட்டிலிருந்து வரும்போது, அனைத்து வசதியும் உள்ள இந்த வீட்டில் தங்கி செல்வது வழக்கமாம். இந்த வீட்டில் மின்சாரம் இல்லாததால் சோலார் பேனல் பயன்படுத்தி மின்விளக்கு எரியவிடப்பட்டிருந்தது. வீட்டை இவரது உறவினர் பராமரித்து வந்துள்ளார்.