தேனி, டிச. 16: தேனி நேரு சிலை அருகே தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடந்தது. மாநில மகளிரணி செயலாளர் நளினி சாந்தகுமாரி தலைமை வகித்தார். போராட்டத்தில் பள்ளன், குடும்பன், தேவேந்திர குலத்தான், பண்ணாடி, வாதிரியான், காலாடி, கடையன் ஆகிய 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அரசாணை வெளியிட கோரியும், தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற்ற கோரியும் கோஷங்களை எழுப்பினர்.