புதுக்கோட்டை, டிச.15: சோமவாரத்தையொட்டி திருவரங்குளம் அரங்குளநாதர் கோயிலில் 108 சங்காபிஷேகம் சிறப்பாக நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் பிரசித்தி பெற்ற சோழர் காலத்து பெரியநாயகி அம்பாள் உடனுறை அரங்குளநாதர் கோயில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மூன்றாவது சோமா வாரத்தை முன்னிட்டு 108 சங்கு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு புரவி புயல் காரணமாக கோயிலுக்குள் மழைநீர் குளம்போல் நின்றதால் சங்காபிஷேக விழா நடைபெறவில்லை. நான்காவது சோம வார விழாவை முன்னிட்டு சங்காபிஷேகம் கோயில் வசந்த மண்டபத்தில் நடந்தது. இதையொட்டி சுவாமி அம்பாள் எழுந்தருள செய்து பட்டாடை உடுத்தி மலர் அலங்காரம் செய்வது சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க ஹோமம் வளர்த்து வழிபாடு செய்தனர்.