கடமலைக்குண்டு அருகே அச்சுறுத்தும் மின்கம்பம் அகற்ற கோரிக்கை

வருசநாடு, டிச. 10: கடமலைக்குண்டு அருகே காமன்கல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 250 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் பின்புறத்தில் மின்கம்பம் ஒன்று சேதமடைந்து ஒடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் நீண்டநாட்களாக கம்பிகள் துருப்பிடித்து தொங்கி கொண்டிருக்கிறது. எனவே அசம்பாவிதம் ஏதும் நடக்கும் முன்பு மின்வாரிய அதிகாரிகள் இந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கிராமவாசி ஆண்டவர் கூறுகையில், ‘கடமலை மயிலை ஒன்றியத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான இடங்களில் மின்கம்பம் ஒடிந்து விழும் நிலையில் உள்ளது. இதில் காமன்கல்லூர் மின்கம்பமும் ஒன்றாகும். எனவே விரைவில் இந்த மின்கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மனித உயிரிழப்பு ஏற்படுவது நிச்சயம்’ என்றார்.

Related Stories: