×

தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு!

 

சென்னை: தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று காலையில் மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில், வடக்கு ஆந்திரா தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வடக்கு ஆந்திரா தெற்கு ஒரிசா பகுதிகளை கடக்கக்கூடும்.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், தென்காசி, கோவை, நெல்லையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Tags : Tamil Nadu ,Chennai ,Chennai Meteorological Department ,Midwest ,northwest Bay of Bengal ,North Andhra Pradesh, South… ,
× RELATED ரூ.43.91 கோடியில் 9 புதிய காவல் நிலையங்கள்:...