நாகர்கோவில், டிச.7: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகள் உயர்ந்து வருகின்றன. பெட்ரோலுக்கு 27 காசுகளும், டீசலுக்கு 31 காசுகளும் உயர்ந்துள்ளது. அத்துடன் இரண்டு ஆண்டுகளில் மிக உயர்ந்த விலையாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.87.16 ஆகவும், டீசல் ரூ.79.89 ஆகவும் நாகர்கோவிலில் நேற்று விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் நாகர்கோவிலில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.92 ஆகவும், டீசல் ரூ.79.62 ஆகவும் விற்பனையாகியது.