கிருஷ்ணகிரியில் அமமுக தேர்தல் அறிக்கை கலந்தாய்வு கூட்டம்

கிருஷ்ணகிரி, டிச.4: கிருஷ்ணகிரி அமமுக கிழக்கு, மேற்கு, மத்திய மாவட்டம் சார்பில், சட்டமன்ற தேர்தல் பணிக்கான ஆய்வு குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கட்சி துணை பொதுச்செயலாளரும், மண்டல பொறுப்பாளருமான பழனியப்பன் தலைமை தாங்கினார். தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சண்முகவேலு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் துணை பொதுச்செயலாளர் பழனியப்பன், வருகிற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில்,  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் வளர்ச்சி பணிகள், தேர்தல் அறிக்கை குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இதில், அமமுக செய்தி தொடர்பாளர் இளந்தமிழ் ஆர்வலர், சிறுபான்மை பிரிவு  துணை செயலாளர் சார்புதீன், மாவட்ட செயலாளர்கள் அறிவழகன், கணேசகுமார், மாரேகவுடு, மாவட்ட அம்மா தொழிற்சங்க செயலாளர் செந்தில்குமார். பொறியாளர் அணி பிரகாஷ், மாவட்ட இளைஞர் அணி கில்பர்ட், நிர்வாகிகள் ராஜேந்திரா, திருமலேஷ், பாலாஜி, ராகவன், எல்லப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: