இது குறித்து வெள்ளவேடு போலீசில் நூர்முகமது ஷேக் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து உதவி ஆணையர் ஜவஹர் உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் லில்லி மற்றும் தலைமைக் காவலர் சௌரிதாஸ் மற்றும் போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் பிரயாம்பத்து கிராமத்தில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பன்னீர் மகன் சதீஷ்(25), வீரா மகன்கள் பிரசாந்த்(24), ஆனந்த்ராஜ்(23), சகாயம் மகன் கௌதம்(22) ஆகிய 4 பேரை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில் இந்த வழிப்பறி மற்றும் தாக்குதலில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த வெள்ளவேடு போலீசார் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post வடமாநில தொழிலாளியை தாக்கி செல்போன், பணம் பறிப்பு: 4 இளைஞர்கள் பிடிபட்டனர் appeared first on Dinakaran.