30ம் தேதி தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு முகாம்: தமிழக அரசு ஏற்பாடு

சென்னை: தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் வரும் 30ம் தேதி தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் வரும் 30ம் தேதி தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம் காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரை நடைபெறுகிறது. சுயமாக தொழில் தொடங்க விரும்பும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். பயிற்சி முகாமின் இறுதியில் தொழில் தொடங்க விரும்பும் நபர்களின் பெயர்கள் பெறப்பட்டு அவர்கள் அடுத்த கட்ட பயிற்சிக்கு அழைக்கப்படுவர். அடுத்த கட்டமாக 3 நாள் திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு  நிதி உதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும். மாவட்ட தொழில் மையங்களோடு இணைந்து 5 நாள் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சிகளும் EDII வழங்கி வருகிறது. மேலும் விவரங்களுக்கு: தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்,  தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள் எண்:  044-22252081, 22252082,  96771 52265, 9444556099 எண்களை தொடர்பு கொள்ளலாம்….

The post 30ம் தேதி தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு முகாம்: தமிழக அரசு ஏற்பாடு appeared first on Dinakaran.

Related Stories: