முக்கியத்துவம் தரவில்லை என்று கூறி முதல்வர் கூட்டத்திலிருந்து வெளியேறிய பா.ஜவினர்

ஓமலூர்: சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில், அதிமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக, பாஜ, தமாகா, புரட்சி பாரதம் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். இதில், முதலாவதாக பாமகவை அழைத்து முதல்வர் ஆலோசனை நடத்தினார்.

பின்னர், பாமக சேலம் மேற்கு தொகுதி வேட்பாளர் அருள், மேட்டூர் தொகுதி வேட்பாளர் சதாசிவம் ஆகியோரை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிமுகம் செய்து வைத்து பேசினார்.   இதனை தொடர்ந்து பாஜ, தமாகா மற்றும் கூட்டணி கட்சியினரை அழைத்தார். அப்போது பாஜவினர், தங்களுக்கு முன்னுரிமை, முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று கூறி கூட்டத்தில் இருந்து வெளியே சென்றனர். பின்னர் அவர்களை மாநில கூட்டுறவு சங்க தலைவர் இளங்கோவன், வெளியே வந்து சமாதானம் செய்து அழைத்துச் சென்றார். அதற்குள் சிலர் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

Related Stories: