141 மனுக்கள் மீது உடனடி தீர்வு

நாமக்கல், அக்.15: நாமக்கல் மாவட்டத்திதில் நேற்று நடைபெற்ற பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாமில் 141 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் 8 தாலுகாவில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் நேற்று பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது. நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் மற்றும் குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலகங்களில் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாம்களில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், செல்போன் பதிவு செய்தல் மற்றும் முகவரி மாற்றம் என மொத்தம் 141 மனுக்கள் பெறப்பட்டன. அனைத்து மனுக்களுக்கும் உடனடி தீர்வு காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post 141 மனுக்கள் மீது உடனடி தீர்வு appeared first on Dinakaran.

Related Stories: