சேலம், டிச.7:சேலம் கோட்டை அண்ணா நகர் காளியம்மன் கோயிலில் மண்டல பூஜை, மகர ேஜாதி மற்றும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கடந்த 17ம் தேதி மண்டல பூஜை தொடங்கியது. தொடர்ந்து 41 நாட்கள் தினசரி காலை 6 மணிக்கு நடைதிறப்பு, 12 மணி முதல் 1 மணி வரை கணபதி ஹோமம், ெநய்அபிஷேகம், அஷ்டாபிஷேகம், இரவு உஷ பூஜை, தீபாராதனை, பகவதி சேவை, தாலாட்டு நடந்து வருகிறது. 27ம் தேதி பகல் 12 மணிக்கு மண்டல பூஜையும், இரவு 7 மணிக்கு புஷ்பாஞ்சலி, ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 8.30 மணிக்கு புஷ்பாஞ்சலி நடக்கிறது. 28ம் தேதி முதல் ஜனவரி 14ம் தேதி வரை நடக்கும் மகர விளக்கு பூஜையில், தினசரி காலை 6 மணிக்கு நடை திறப்பு, பகல் 12 மணிக்கு நடைசாத்துதல், மாலை 5 மணிக்கு நடை திறப்பு, இரவு 9 மணிக்கு நடைசாத்துதல் நடக்கிறது.